Sunday 9 November 2014

அரச மரத்தடியில் துவங்கியது புதிய சங்கம்

திருவள்ளூர் மாவட்ட பகுதி நேர ஆசிரியர்களின் ஆலோசனை கூட்டம் இன்று திருத்தணி திரவுபதியம்மன் கோவில் வளாகத்தில் நடந்தது. இதில், 150 ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். சிறப்பு விருந்தினராக, ஆர்.கே.பேட்டை வட்டார ஆசிரியர் பயிற்றுனர் பழனி மற்றும் தொலைதொடர்பு துறை தியாகராஜன் கலந்து கொண்டு, சிறப்புரை ஆற்றினர். 


அரசமரத்தடியில் நடந்த கூட்டத்திற்கு வந்து சிறப்பித்த சிறப்பு விருந்தனர்களுக்காக, அருகில் உள்ள மண்டபத்தில் சென்று இரண்டு இருக்கைகள் கடனாக பெற்று வந்து அமரச் செய்ய வேண்டிய தர்மசங்கடமான நிலை ஏற்பட்டது. மிக எளிமையாக நடந்த கூட்டமானாலும், மிக சிறப்பாக நடந்தது. 
திரு. பழனி அவர்கள் தன்னுடைய வாழ்க்கையில் எதிர்கொண்ட ஏளனங்களையும் சவால்களையும் எதிர்கொண்டு, தற்போது இந்த நிலைக்கு வந்தது குறித்து பேசினார். இதில் தன்னலம் துளியும் இல்லை. 4,000 ரூபாய் சம்பளத்தில் சேர்ந்து தான்,மாநில தற்காலிக உதவியாளர்கள் சங்கம் துவங்கி, அதன் மூலம் போராடி பெற்ற உரிமைகளை நினைவு கூர்ந்தார்.

மேலும், கடமையை செய்யுங்கள், பிரச்சனை வந்தால் அதை எதிர்கொள்ள நான் உதவுகிறேன் என்று கூறி சங்கம் அமைக்கவும் அதை இன்றே இ்பபோதே துவங்குங்கள் என்று கூறி, தலைவர் பொருளாளர் என, 20 பேரை தேர்வு செய்து நியமனம் செய்து வைத்தார். காலை 10:30 மணிக்கு துவங்கிய கூட்டம் பகல் 2:00 மணிக்கு நிறைவடைந்தது. வளமான எதிர்காலத்திற்கு முதல் படியை மிதித்த திருப்தியுடன் ஆசிரியர்கள் பிரிந்து சென்றனர்.

Wednesday 5 November 2014

EENADU NEWS ABOUT PT TEACHRES MEETING


அதே 5,000த்தில் நிலை கொண்டுள்ளது



www.facebook.com/computertrl

ஏழுமலை பாண்டியன்

https://www.facebook.com/groups/1478641355757447/


திருவள்ளூர் மாவட்ட பகுதி நேர சிறப்பாசிரியர்கள்


பகுதிநேர ஆசிரியர்கள் ஆலோசனை கூட்டம், பொதட்டூர்பேட்டையில் இன்று காலை நடந்தது. இதில் கலந்து கொண்ட ஆசிரியர்கள் தங்களின் உள்ள குமுறல்களை, வேதனையுடன் வெ ளிப்படுத்தினர். கடந்த மூன்று ஆண்டுகளாக குறைந்த சம்பளதில் வேலை செய்துவரும் தாங்களுக்கு சம்பள உயர்வு இல்லை, பணி நிரந்தரம் இல்லை, பணியிட மாறுதல் மறுக்கப்படுகிறது என அடுக்கடுக்காக புகார்களை அடுக்கினர்.

மேலும், கடந்த மூன்று ஆண்டில், பால் விலை இரண்டு முறை, பஸ் கட்டணம் இரட்டிப்பு, பெட்ரோல் விலை பலமுறை உயர்த்தப்பட்டுள்ள நிலையில், பகுதிநேர ஆசிரியர்களின் சம்பளம் மட்டும் அதே 5,000த்தில் நிலை கொண்டுள்ளது. 

பகுதிநேர வேலை நிரந்தரமாகும் என்ற நம்பிக்கையில், தனியார் பள்ளி மற்றும் நிறுவனங்களில் பார்த்துவந்த வேலையை உதறிவிட்டுவந்து, தற்போது ஐந்தாயிரத்தில் குடும்பத்தை நடத்த முடியாமல் திணறி வருகிறோம்.


அட 100 நாள் வேலைக்காவது போகலாம் என்றால் அதற்கும் முடியாது. இப்படி உண்மையிலேயே வறுமைகோட்டிற்கு கீழே உள்ள எங்களை அரசாங்கம் என்றைக்கு கரையேற்றும் என கண்ணீர் சிந்தினர்.


அடுத்த கட்டமாக, வரும் 9ம் தேதி, திருத்தணி திரவுபதியம்மன் கோவில் வளாகத்தில் கூட்டம் நடத்தி, சில முக்கிய முடிவுகளை எடுக்க உள்ளதாக தெரிவித்தனர்.

Tuesday 18 February 2014

திருவள்ளூர் மாவட்ட பகுதி நேர ஆசிரியர்கள் மனு

திருவள்ளூர் மாவட்ட அனைத்து பகுதி நேர ஆசிரியர்கள்
பணி நிரந்தம் மற்றும் ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவிடம் நேற்று (17/02/14) மனு அளி்த்தனர். இதில், நுாற்றுக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

Saturday 1 February 2014

பணம் தேவையில்லை: வருகை மட்டுமே போதுமானது

திருவள்ளூர் மாவட்டம், ஆர்.கே.பேட்டையில் நாளை நடைபெறும் கணினி பட்டதாரிகள் கூட்டத்திற்கு, சேலம், விழுப்புரம், திண்டுக்கல், பழனி, ராமநாதபுரம், கோவை உள்ளிட்ட தமிழகத்தின் அனைத்து பகுதிகளில் இருந்தும் கணினி பட்டதாரிகள் வர விருப்பம் தெரிவி்த்துள்னர். அலைபேசி வாயிலாக எங்களை தொடர்பு கொண்டு வருகின்றனர்.
தொலை துார நண்பர்களின் ஆர்வம், அர்ப்பணிப்புக்கு நாங்கள் தலைவணங்குகிறோம். போக்குவரத்து சிரமம் கருதி, நேரில் வராமல் இணையத்தில் கூட்டத்தின் தீர்மானம், நடவடிக்கைகளை பார்த்து தெரிந்து கொள்ள வேண்டுகிறோம்.
நேரில் வந்து கலந்து கொள்வர்களின் கருத்துக்கள் முழுமையாக வெளியிட ஏற்பாடு செய்கிறோம்.


கணினி பெண் பட்டதாரிகள் கலந்து கொள்ளலாமா, என சிலர் அலைபேசியில் தொடர்பு கொண்டு கேட்கின்றனர். இருபாலரும் கலந்து கொள்ளலாம். மதிய உணவு வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பணம் தர வேண்டுமா என்ற கேள்விக்கும் இடம் இல்லை.
பட்டதாரிகள் கூட்டத்திற்கு வந்து தங்களி்ன் கருத்துக்களை பகிர்ந்து கொண்டாலே போதுமானது.


தொடர்புக்கு: 8148917745, 9786906275, 9444187741, 9840772600, 7373892058

Thursday 30 January 2014

சான்றிதழ் சரிபார்ப்பு இல்லை: ஆலோசனை மட்டுமே

பிப்ரவரி 2ம் தேதி திருவள்ளூர் மாவட்டம், ஆர்.கே.பேட்டையில், காலை 10 மணிக்கு, பஸ் நிலையம் அருகே, அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில், கணினி பட்டதாரிகள் மற்றும் கணினி பகுதி நேர ஆசிிரயர்கள், கணினி பி.டி.ஏ ஆசிரியர்களுக்கான ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது.
கலந்தாய்வு கூட்டம் என தினமலர் நாளிதழில் வெளியான செய்தியை அடுத்து, பலரும் இது சான்றிதழ் சரிபார்ப்பு என நினைத்து அலைபேசியில் சந்தேகம் கேட்டு வருகின்றனர்.
சா...ன்றிதழ் சரிபார்ப்பு எதுவும் கிடையாது. இது, நமது பிரச்சனைகள் குறித்து விவாதிக்கும் கூட்டம் தான். சான்றிதழ் எதுவும் கொண்டு வர வேண்டாம் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் தகவலுக்கு தொடர்பு கொள்ளவும்: 9786906275 8148917745 9840772600, 9444187741, 94444526216, 9444069120, 9751393838.

முகநுால் மற்றும் வலைதளங்கள் மூலமாக இந்த தகவல் மாநிலம் முழுவதும் வேகமாக பரவி வருகிறது. மேலும், இந்த செய்தியை தங்களின் வலைப்பக்கத்தில் பகிர்ந்து கொண்ட நண்பர்களுக்கும், பட்டதாரிகளின் அலைபேசி எண்களை தந்து உதவிய அனைவருக்கும் நன்றி.

2ம் தேதி நடைபெற உள்ள கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகள் குறித்து நாளேடுகள் மற்றும் புதிய தலைமுறை தொலைக்காட்சியில் வெளியிட ஏற்பாடுகள் நடந்து வருகிறது.

குறிப்பு: கூட்டத்திற்கு வரும் பட்டதாரிகள், சனிக்கிழமை மாலைக்குள், தங்களின் வருகை குறித்து 8148917745 என்ற எண்ணிற்கு sms மூலம் உறுதி செய்யவும். எத்தனை பேர் கூட்டத்திற்கு வர உள்ளனர் என்ற அடிப்படையில் ஏற்பாடுகளை செய்ய வசதியாக இருக்கும்.